/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கோலாட்டம் ஆடியபடி 500 பெண்கள் கிரிவலம்
/
கோலாட்டம் ஆடியபடி 500 பெண்கள் கிரிவலம்
ADDED : நவ 25, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை; திருவண்ணாமலையிலுள்ள 2,668 அடி உயர மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா, தமிழகம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, 500 பெண் நடன கலைஞர்கள், பரதநாட்டியம் மற்றும் கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., சுற்றளவு கொண்ட மலையை நேற்று கிரிவலம் வந்து, அருணாசலேஸ்வரரை தரிசித்தனர்.
இவர்களுடன் ஏராளமான பக்தர்கள் சென்றனர். புதுச்சேரியைச் சேர்ந்த பக்தர்கள், நடராஜ பெருமானை சுமந்தவாறு கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.