sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

/

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்


ADDED : ஜூலை 08, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலுள்ள தங்க கொடிமரத்தில், ஆண்டுக்கு, 4 முறை கொடியேற்றம் நடக்கிறது. இதில், சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான, ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக, ஆனி பிரம்மோற்சவ விழா, அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று காலை, ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி

களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், விநாயகர், அருணாசலேஸ்வரர் உடனுறை உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கொடிமரம் முன் எழுந்தருளினர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்களுக்கு விழா நடக்கும்.






      Dinamalar
      Follow us