sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

'பலான' ஆசிரியரை முட்டி போட வைத்து தாக்கியவர் கைது

/

'பலான' ஆசிரியரை முட்டி போட வைத்து தாக்கியவர் கைது

'பலான' ஆசிரியரை முட்டி போட வைத்து தாக்கியவர் கைது

'பலான' ஆசிரியரை முட்டி போட வைத்து தாக்கியவர் கைது


ADDED : செப் 25, 2024 01:30 AM

Google News

ADDED : செப் 25, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துப்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை, ஆசிரியர் தனகரசு என்பவர், சில நாட்களுக்கு முன், மது போதையில், ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த ஆடியோ வெளியாகி பெற்றோர், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து மாணவியின் அண்ணன் சதீஷ், 23, அவரது நண்பர்கள் 23 - 24 வயதுடைய ஐந்து பேர், கடந்த, 12ம் தேதி ஆசிரியர் தனகரசுவை அழைத்து சென்று, முட்டி போட வைத்து, அடித்து உதைத்து, அந்த வீடியோவை இணையதளத்தில் பரவ விட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பின், தனகரசுவை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அவரை தாக்கிய, மாணவியின் அண்ணன் சதீஷ் உள்ளிட்ட ஆறு பேர் மீது சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று சதீஷை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஐவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us