sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது

/

சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது

சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது

சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது


ADDED : ஜன 13, 2024 01:08 AM

Google News

ADDED : ஜன 13, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 48. இவர், அதே பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

இவரிடம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், 2020ம் ஆண்டு மாதாந்திர சீட்டில் சேர்ந்து, மொத்தம் 5 லட்சம் ரூபாய் செலுத்தினார். முதிர்ச்சியடைந்த நிலையிலும், பணத்தை திருப்பி கொடுக்காமல் மகேந்திரன் அலைக்கழித்தார்.

அதுபோல, மேலும், ஏழு பேரிடம் 18 லட்சம் ரூபாயையும் தராமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், மோகன்ராஜ் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப்பதிந்து மகேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

l கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 59, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், தங்கள் பெயர்களை குறிப்பிட்டு, வங்கியில் கடன் பெற்ற தன் சகோதரர் சீனிவாசன், 58, அவரது மனைவி பிரமிளா, 55, ஆகியோர், 75 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளார்.

கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் சீனிவாசன், அவரது மனைவி பிரமிளா மற்றும் இரு தனியார் வங்கி நிர்வாகத்தினர் மீது, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us