sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடும் விழா

/

அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடும் விழா

அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடும் விழா

அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடும் விழா


ADDED : செப் 24, 2024 03:03 AM

Google News

ADDED : செப் 24, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் டிச., 4 ல் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, டிச., 10 ல் மஹா ரத தேரோட்டம், 13 ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழா பூர்வாங்க பணிகள் தொடங்க, நேற்று காலை, 6:40 மணிக்கு கன்யா லக்னத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

இதையொட்டி, தங்க கொடி மரத்தின் அருகே சம்மந்த விநாயகருக்கு, அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம்

முழங்க, ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல், அழைப்பிதழ் அச்சடித்தல், தேர் பழுது பார்த்தல், உள்ளிட்ட அனைத்து பூர்வாங்க பணிகள் தொடங்க

உள்ளன.






      Dinamalar
      Follow us