/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
இடிந்து விழுந்த பாலம் மத்திய குழுவினர் ஆய்வு
/
இடிந்து விழுந்த பாலம் மத்திய குழுவினர் ஆய்வு
ADDED : டிச 11, 2024 02:08 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழை பாதிப்பு குறித்து, மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, ஏழு பேர் பலியாகினர்.
இந்த இடத்தில் மத்திய குழுவினர் டாக்டர் பொன்னுசாமி, ஹைதராபாதைச் சேர்ந்த வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் சரவணன், சென்னை வேளாண் துறை அதிகாரி பாலாஜி உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
மழையால் பயிர்கள் பாதித்துள்ள கோணலுார், சின்னகாங்கியனுார், வேளானந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.
மேலும், தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலத்தையும் பார்வையிட்டனர். அப்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.