sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சாத்தனுார் அணை திறப்பு 14 ஊர்களுக்கு எச்சரிக்கை

/

சாத்தனுார் அணை திறப்பு 14 ஊர்களுக்கு எச்சரிக்கை

சாத்தனுார் அணை திறப்பு 14 ஊர்களுக்கு எச்சரிக்கை

சாத்தனுார் அணை திறப்பு 14 ஊர்களுக்கு எச்சரிக்கை


ADDED : அக் 27, 2024 02:04 AM

Google News

ADDED : அக் 27, 2024 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், திருவண்ணாமலை சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதில், 119 அடி உயரம், 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட சாத்தனுார் அணைக்கு, தற்போது வினாடிக்கு, 3,500 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, 113.90 அடி உயரத்துடன், 6,211 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது.

அணை பாதுகாப்பு கருதி, 1,350 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள கொளமஞ்சனுார், திருவடத்தனுார், புதுார் செக்கடி, சதா குப்பம் உட்பட, 14 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us