sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

 அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா துவக்கம்

/

 அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா துவக்கம்

 அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா துவக்கம்

 அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா துவக்கம்


ADDED : நவ 25, 2025 05:51 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: நவ. 25-: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவின் கொடியேற்ற விழா நடந்தது.அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என, கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன், முதல் நாள் விழா துவங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர்கள் பஞ்ச மூர்த்திகள் போன்றோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க, 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர். அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என, கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு, வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொ டர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், ஏழாம் நாளான, வரும், 30ம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், டிச., 3 அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரம் விழாக்கோ லம் பூண்டுள்ளது.






      Dinamalar
      Follow us