sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

 பெண்ணுக்கு தொந்தரவு வி.ஏ.ஓ.,வுக்கு வலைவீச்சு

/

 பெண்ணுக்கு தொந்தரவு வி.ஏ.ஓ.,வுக்கு வலைவீச்சு

 பெண்ணுக்கு தொந்தரவு வி.ஏ.ஓ.,வுக்கு வலைவீச்சு

 பெண்ணுக்கு தொந்தரவு வி.ஏ.ஓ.,வுக்கு வலைவீச்சு


ADDED : நவ 17, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை சேர்ந்த கணவரை இழந்த, 35 வயது பெண், அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 36; மேல்வில்லிவலம் வி.ஏ.ஓ.,வாக உள்ளார்.

பெண்ணின் கடைக்கு, 12ம் தேதி சென்றவர், ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு செய்தபோது, பெண் கூச்சலிடவே, மிரட்டல் விடுத்து சென்றார்.

அன்று மாலை, தன் உதவியாளரான டேவிட்டை கடைக்கு அனுப்பியுள்ளார். அவர், 'நீ அழகாக இருக்கிறாய், எப்போது வருகிறாய் என்று சதீஷ்குமார் கேட்டார்' என கூறியதுடன், ஒரு ஏ.டி.எம்., கார்டை தந்து, 'எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் டேவிட் மொபைல்போனை தொடர்பு கொண்ட சதீஷ்குமார், பெண்ணிடம் தரச்செய்து, 'தனியாக குடும்பம் நடத்த ஆசையாக உள்ளது' என, பேசியுள்ளார். அதிர்ச்சியடைந்த கைம்பெண், சேத்துப்பட்டு போலீசில் புகாரளித்தார்.

வி.ஏ.ஓ., சதீஷ்குமார், உதவியாளர் டேவிட் மீது வழக்குப்பதிந்த போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us