sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

'இன்ஸ்டா'வில் பழகிய மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் தலைமறைவு

/

'இன்ஸ்டா'வில் பழகிய மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் தலைமறைவு

'இன்ஸ்டா'வில் பழகிய மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் தலைமறைவு

'இன்ஸ்டா'வில் பழகிய மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் தலைமறைவு


ADDED : பிப் 17, 2025 12:59 AM

Google News

ADDED : பிப் 17, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யாறு: இன்ஸ்டாகிராமில் பழகிய 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சத்தியமூர்த்தி, 22. இவர், 13 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பேசி, பழகி வந்தார்.

சில மாதங்களுக்கு முன், லாவகமாக பேசி மாணவியை நேரில் வரவழைத்துள்ளார். அவரை நம்பிச் சென்ற மாணவியை, தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பி உள்ளார். பயந்து போன மாணவியும், தான் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தை யாரிடமும் கூறவில்லை.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அவரை பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, சத்தியமூர்த்தி தன்னை பலாத்காரம் செய்த விபரத்தை தெரிவித்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், செய்யாறு அனைத்து மகளிர் போலீசார், சத்தியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us