ADDED : நவ 25, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்தனர்.
ஆந்திரா, தமிழகம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, 500 பெண் நடன கலைஞர்கள் திருவண்ணாமலைக்கு நேற்று வந்தனர். பரத நாட்டியம் மற்றும் கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., கிரிவலம் வந்து, அருணாசலேஸ்வரரை தரிசித்தனர்.இவர்களுடன் ஏராளமான பக்தர்கள் சென்றனர். புதுச்சேரியை சேர்ந்த பக்தர்கள், நடராஜ பெருமானை சுமந்தவாறு கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.