ADDED : நவ 25, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: ஆன்மிக நகரமாக விளங்கும் திருவண்ணாமலையில், கிரிவலப்-பாதையை சுற்றிலும், 5,000க்கும் மேற்பட்ட சாதுக்கள் நடைபா-தையில் வசிக்கின்றனர்.
இதில் போலீசாரால் தேடப்படும் குற்ற-வாளிகள் சிலர், சாதுக்கள் போர்வையில் நடமாடி வருகின்றனர். தற்போது தீப திருவிழா வருவதால், பலவகை குற்றவாளிகள் சாதுக்கள் போர்வையில் திருவண்ணாமலைக்கு வர தொடங்-குவர்.இதை கண்காணிக்க நிரந்தரமாக திருவண்ணாமலையில் தங்கி-யுள்ள சாதுக்களுக்கு, போலீசார் சார்பில் அடையாள அட்டை வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதில், 500க்கும் மேற்-பட்ட சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து மற்ற சாதுக்களுக்கும் வழங்கப்படவுள்ளது.