sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

கடத்தலை தடுத்த எஸ்.ஐ., யை தாக்கிய இன்ஸ்., கணவர் கைது

/

கடத்தலை தடுத்த எஸ்.ஐ., யை தாக்கிய இன்ஸ்., கணவர் கைது

கடத்தலை தடுத்த எஸ்.ஐ., யை தாக்கிய இன்ஸ்., கணவர் கைது

கடத்தலை தடுத்த எஸ்.ஐ., யை தாக்கிய இன்ஸ்., கணவர் கைது


ADDED : ஏப் 11, 2025 02:40 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலசப்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம், ஆதமங்கலம் புதுார் அடுத்த கெங்கவரத்தில் வரும், 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காளை விடும் விழா நடைபெற உள்ளது. இதற்காக, கலசப்பாக்கம் அடுத்த நவாப்பாளையத்திலுள்ள மிருகண்டா அணை அருகே அரசு நிலத்தில், வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினியின் கணவரும், வக்கீலுமான குமரன், 50, தன் ஆதரவாளர்களுடன் ஒரு பொக்லைன் இயந்திரம், மூன்று டிராக்டர்களை கொண்டு வண்டல் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆதமங்கலம் புதுார் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன், அங்கு சென்று, மண் அள்ளிய இயந்திரம், டிராக்டர்களை பறிமுதல் செய்தார். ஆத்திரமடைந்த குமரன், பொக்லைன் இயந்திரம் முன் பைக்கை நிறுத்தி தகராறில் ஈடுபட்டார்.

மேலும், எஸ்.ஐ., நாகராஜனை தாக்கினார். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., சுதாகர், நேரில் விசாரணை நடத்தினார். பின், குமரனை போலீசார் கைது செய்தனர். அங்கு பதற்றமான நிலை உருவானதால், போலீஸ் ஸ்டேஷன் முன் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us