sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

முட்டை கேட்ட மாணவருக்கு துடைப்பக்கட்டை அடி சத்துணவு ஊழியர்கள் கைது சத்துணவு சமையலர், உதவியாளர் கைது

/

முட்டை கேட்ட மாணவருக்கு துடைப்பக்கட்டை அடி சத்துணவு ஊழியர்கள் கைது சத்துணவு சமையலர், உதவியாளர் கைது

முட்டை கேட்ட மாணவருக்கு துடைப்பக்கட்டை அடி சத்துணவு ஊழியர்கள் கைது சத்துணவு சமையலர், உதவியாளர் கைது

முட்டை கேட்ட மாணவருக்கு துடைப்பக்கட்டை அடி சத்துணவு ஊழியர்கள் கைது சத்துணவு சமையலர், உதவியாளர் கைது


ADDED : ஏப் 05, 2025 02:55 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 02:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த செங்குணம், கொள்ளைமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 44 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உட்பட இரு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்க, சமையலர் லட்சுமி, உதவியாளர் முனியம்மாள் பணிபுரிந்தனர். பள்ளியில், மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகளை இவர்கள் சரிவர வழங்குவதில்லை.

நேற்று, சமையலறையில் முட்டை பதுக்கி வைத்திருந்ததை பார்த்த மாணவர் ஒருவர், 'முட்டையை ஏன் வழங்க மறுக்கிறீர்கள்?' என, கேள்வி எழுப்பினார்.

இதில், ஆத்திரமடைந்த லட்சுமி, முனியம்மாள் ஆகியோர் மாணவன் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, ஆசிரியை ப்ளோரா முன்னிலையில், துடைப்பத்தால் விரட்டி, விரட்டி அடித்தனர்.

வலி தாங்க முடியாத மாணவன் அலறித் துடித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

தாக்குதல் குறித்து, மாணவ - மாணவியரின் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பியதால், லட்சுமி, முனியம்மாளை போளூர் பி.டி.ஓ., பாபு, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

மேலும், வகுப்பு ஆசிரியை ப்ளோராவை, மட்டப்பிறை பள்ளிக்கு இடமாற்றம் செய்து, திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமி, முனியம்மாளை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us