ADDED : செப் 20, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கொளத்துார் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அங்கு, 50 வயது பெண் ஒருவர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக் கண்ட மக்கள், கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.
கொலையான பெண் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். அவரின் பையில் பூந்தமல்லி - ஆவடி டிக்கெட்டும் இருந்தது. எனினும், அப்பெண் அணிந்திருந்த நகைகள் திருடப்படவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.