sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

நெய்குட காணிக்கை கவுன்டர் திருவண்ணாமலையில் திறப்பு

/

நெய்குட காணிக்கை கவுன்டர் திருவண்ணாமலையில் திறப்பு

நெய்குட காணிக்கை கவுன்டர் திருவண்ணாமலையில் திறப்பு

நெய்குட காணிக்கை கவுன்டர் திருவண்ணாமலையில் திறப்பு


ADDED : அக் 06, 2025 02:13 AM

Google News

ADDED : அக் 06, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப நெய் குட காணிக்கை கவுன்டர் திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா நவ., 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.

டிசம்பர் 3ம் தேதி, கோவில் கருவறை எதிரில் அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்படுகிறது.

விழா நடக்கும் 10 நாட்களும், காலை மற்றும் இரவு விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் வீதி உலா நடத்தப்படும்.

ஏழாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்க, செப்., 24ல், கோவில் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடப்பட்டது.

தீபத் திருவிழாவில் மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக நெய் காணிக்கை செலுத்துவது வழக்கம். நெய் காணிக்கை பக்தர்கள் செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில் கவுன்டரை கோவில் இணை ஆணையர் பரணி தரன் திறந்து வைத்தார்.

நெய் காணிக்கை செலுத்த விரும்புவோர், 1 கிலோ 250 ரூபாய், அரை கிலோ 150 ரூபாய், கால் கிலோ 80 ரூபாய் என கவுன்டரில் கட்டணம் செலுத்தினால் போதும். கடந்தாண்டு நெய் காணிக்கையாக பக்தர்கள் 2.15 கோடி ரூபாய் செலுத்தியிருந்தனர். இந்த ஆண்டு, 2.50 கோடி ரூபாய் வசூலாகும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.






      Dinamalar
      Follow us