sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

ஹெல்மெட், லைட் இல்லை டூ - வீலரில் சென்ற 2 பேர் பலி

/

ஹெல்மெட், லைட் இல்லை டூ - வீலரில் சென்ற 2 பேர் பலி

ஹெல்மெட், லைட் இல்லை டூ - வீலரில் சென்ற 2 பேர் பலி

ஹெல்மெட், லைட் இல்லை டூ - வீலரில் சென்ற 2 பேர் பலி


ADDED : பிப் 24, 2024 12:58 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துப்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த உலகம்பட்டையை சேர்ந்தவர் வசந்தகுமார், 16, பெரியநொளம்பை கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன், 16, அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 15. நண்பர்களான மூவரும், பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, பிளஸ் 1 படித்து வந்தனர்.

இவர்களது நண்பரின் சகோதரி திருமணம், விழுப்புரம் மாவட்டம் செவலாம்பாடி கூட்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

இதற்காக, நேற்று முன்தினம் இரவு நடந்த வரவேற்பு விழாவில் பங்கேற்று விட்டு, மூவரும் ஹெட்லைட் இல்லாத ஒரு ஹோண்டா பைக்கில், ஹெல்மெட் அணியாமல் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, எதுவாய்பேட்டை கூட்ரோடு அருகே சென்றபோது, சாலையோர புளிய மரத்தின் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வசந்தகுமார், சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

படுகாயமடைந்த அய்யப்பனை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவலுார் பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதியில்லாத, 18 வயதுக்கு குறைவான இவர்கள், வாகனம் ஓட்டிச் சென்றதை தடுக்காத பெற்றோர் மீது வழக்கு தொடர, போலீசார் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us