sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

அண்ணாமலையார் மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற நோட்டீஸ்; எதிர்ப்பு தெரிவித்து மறியல்

/

அண்ணாமலையார் மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற நோட்டீஸ்; எதிர்ப்பு தெரிவித்து மறியல்

அண்ணாமலையார் மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற நோட்டீஸ்; எதிர்ப்பு தெரிவித்து மறியல்

அண்ணாமலையார் மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற நோட்டீஸ்; எதிர்ப்பு தெரிவித்து மறியல்

1


ADDED : டிச 27, 2024 07:43 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:43 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றிட, வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை அடிவாரத்தில், 25,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இவற்றிற்கு சில வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், பெஞ்சல் புயல் மழை காரணமாக, திருவண்ணாமலையில், கடந்த, 1ம் தேதி அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவில் ராட்சத பாறை உருண்டு வந்து, மலை அடிவாரத்தில். வ.உ.சி., நகரில் கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது. வீட்டினுள் இருந்த, 7 பேர் சிக்கி பலியாகினர்.

இதை தொடர்ந்து, மலை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முதற் கட்டமாக வருவாய்த்துறை சார்பில், 1,535 வீட்டின் உரிமையாளர்களுக்கு, மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய விருப்பமா, இல்லையா என குறிப்பிட்டு, தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறு நோட்டீஸ் வழங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் சமரசம் செய்து மறியலை கைவிட செய்தனர். தொடர்ந்து மலை அடிவாரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us