/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தனியார் பள்ளி பஸ் மோதி பிளஸ் 1 மாணவர் பலி
/
தனியார் பள்ளி பஸ் மோதி பிளஸ் 1 மாணவர் பலி
ADDED : அக் 09, 2025 01:41 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நல்லுாரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் இந்திரேஷ், 18. அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, நல்லுார் - ஓசூர் சாலையில், பஜாஜ் பல்சர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றார்.
சித்தனப்பள்ளியில் உள்ள பீஸ் வேலி தனியார் லே அவுட் அருகே சென்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த, சித்தார்த் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பஸ், பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட மாணவர் இந்திரேஷ் படுகாயமடைந்து, ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். நல்லுார் போலீசார், பஸ்சை அலட்சியமாக ஓட்டி வந்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான, ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த பாப்பையா, 51, என்பவரை தேடி வருகின்றனர்.