sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

செருப்பை பறித்து ஆற்றில் வீசிய தகராறு நண்பனை அடித்து கொன்ற வாலிபர் கைது

/

செருப்பை பறித்து ஆற்றில் வீசிய தகராறு நண்பனை அடித்து கொன்ற வாலிபர் கைது

செருப்பை பறித்து ஆற்றில் வீசிய தகராறு நண்பனை அடித்து கொன்ற வாலிபர் கைது

செருப்பை பறித்து ஆற்றில் வீசிய தகராறு நண்பனை அடித்து கொன்ற வாலிபர் கைது


ADDED : அக் 09, 2025 01:39 AM

Google News

ADDED : அக் 09, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தானிப்பாடி, தானிப்பாடி அருகே, ஆற்றில் குளிக்கும்போது, செருப்பை பறித்து ஆற்றில் வீசிய தகராறில் வாலிபரை அடித்து கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் மணிகண்டன், 21. கடந்த, 5ம் தேதி, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் நீரில் இறங்கி மணிகண்டன் குளித்தார். மீண்டும் வீடு திரும்பவில்லை.

6ம் தேதி காலை, உடலில் ரத்த காயங்களுடன் சடலமாக ஆற்றில் மீட்கப்பட்டார். தானிப்பாடி போலீசார், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகி இருக்கலாம் என கூறினர். ஆனால், உறவினர்கள் உடலில் காயம் இருப்பதால் சாவில் சந்தேகம் உள்ளது. உரிய விசாரணை நடத்த கோரி அன்று, அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் உடற்

கூறாய்வில், மணிகண்டன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியை சேர்ந்த, 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில், ராகுல், 20, என்பவர் மணிகண்டனை அடித்த கொன்றது தெரியவந்தது. மேலும், நண்பர்களான மணிகண்டன், ராகுல் ஆகிய இருவரும் கடந்த, 5ம் தேதி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, மணிகண்டனின் செருப்பை பறித்து, விளையாட்டாக ராகுல் ஆற்றில் வீசினார். இதில், ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது, ராகுல் தாக்கியதில் மணிகண்டன் பாறையில் விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதிர்ச்சியடைந்த ராகுல், அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதனிடையே தானிப்பாடி போலீசார், நேற்று முன்தினம் இரவு, ராகுலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us