sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பொங்கல் பரிசு கூப்பனை பறித்து ஓடிய பஞ்., தலைவர்

/

பொங்கல் பரிசு கூப்பனை பறித்து ஓடிய பஞ்., தலைவர்

பொங்கல் பரிசு கூப்பனை பறித்து ஓடிய பஞ்., தலைவர்

பொங்கல் பரிசு கூப்பனை பறித்து ஓடிய பஞ்., தலைவர்


ADDED : ஜன 11, 2024 01:45 AM

Google News

ADDED : ஜன 11, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரணமல்லுார்:திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லுார் அடுத்த கடுகனுார் பஞ்சாயத்தில் உள்ள ரேஷன் கடையில், 437 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கடையின் விற்பனையாளராக சின்னதுரை, 45, என்பவர் உள்ளார். இந்த பஞ்சாயத்து தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த சந்தோஷ், 50, உள்ளார்.

ரேஷன் கடை பணியாளர் சின்னதுரை, பொங்கல் பரிசு தொகுப்பு கூப்பன்களை, ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக நேற்று முன்தினம் வினியோகம் செய்தார். அப்போது, அங்கு வந்த பஞ்., தலைவர் சந்தோஷ் திடீரென விற்பனையாளர் சின்னதுரையிடமிருந்து, 10 பரிசு தொகை கூப்பன்களை பறித்து, தப்பி ஓடினார்.

அதில், ஆறு கூப்பன்கள் இறந்தவர்கள் பெயரில் இருந்தன. இது குறித்து விற்பனையாளர் சின்னதுரை, செய்யாறு வட்ட வழங்கல் அலுவலர் சங்கீதா, கூட்டுறவு துறை தனி அலுவலர் முருகேசன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தார்.

இருவரும் விசாரணை நடத்தி, பஞ்., தலைவர் சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரணமல்லுார் போலீசில் புகார் செய்தனர்.






      Dinamalar
      Follow us