/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலையில் புரட்டாசி பிரதோஷ வழிபாடு
/
தி.மலையில் புரட்டாசி பிரதோஷ வழிபாடு
ADDED : அக் 16, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ தினமான நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, கிளி கோபுரம் அருகிலுள்ள அதிகார நந்தி, தங்க கொடிமரம் அருகிலுள்ள சிறிய நந்தி சிலைகளுக்கு, பால், பன்னீர், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. கொட்டும் மழையிலும் பங்கேற்ற பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என கோஷமிட்டு வழிபட்டனர்.