/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு சாகும் வரை சிறை
/
5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு சாகும் வரை சிறை
5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு சாகும் வரை சிறை
5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு சாகும் வரை சிறை
ADDED : பிப் 02, 2024 04:49 PM
திருவண்ணாமலை: செங்கம் அருகே, 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடத்த வாசுதேவன்பட்டை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜேந்திரன், 69; இவர், 2019 அக்., 10 ம் தேதி, 5 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பாச்சல் போலீசார், ராஜேந்திரனை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கு, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, ராஜேந்திரனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

