/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கோவில் பூட்டை உடைத்து சுவாமி சிலைகள் திருட்டு
/
கோவில் பூட்டை உடைத்து சுவாமி சிலைகள் திருட்டு
ADDED : செப் 19, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தானிப்பாடி:கோவில் பூட்டை உடைத்து சுவாமி சிலைகள் திருடப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அடுத்த த.மோட்டூரில், இருளர் குடிசை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு, நேற்று காலை பூஜை செய்ய பூசாரி வந்தார்.
அப்போது, கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கோவிலில் இருந்த இரண்டரை அடி உயர வெண்கல முருகன், ஒன்றரை அடி உயர வள்ளி - தெய்வானை சிலைகள், தாலி ஆகியவை திருடு போனது தெரிந்தது.
தானிப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.