sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

தனக்கு தானே கழுத்தை அறுத்து பெண் பலி

/

தனக்கு தானே கழுத்தை அறுத்து பெண் பலி

தனக்கு தானே கழுத்தை அறுத்து பெண் பலி

தனக்கு தானே கழுத்தை அறுத்து பெண் பலி


ADDED : செப் 21, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போளூர்:போளூரில், மாரியம்மன் கோயில் வளாகத்தில் சாமியாடிய பெண் தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்டதில் பலியாகினர்.

வேலுார் விருபாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுரி முடி விற்பனை தொழிலாளி முத்துவேல், 38. இவரது மனைவி சத்யா, 34. சில மாதங்களுக்கு முன், இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பழமை வாய்ந்த நல்ல தண்ணீர் குளக்கரையில், தனியாரால் பராமரிக்கப்பட்டு வரும், முத்து மாரியம்மன் கோயிலில், பேய் ஓட்டுதல், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு மந்திரம் போடுதல் போன்றவை செய்யப்படுகின்றன.

இதை கேள்விப்பட்டு இக்கோயிலிற்கு சென்றால் மனைவி குணமாகிவிடுவார் என நம்பி, முத்துவேல், தன் மனைவியை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் மாலை, போளூர் நல்ல தண்ணீர் குள மாரியம்மன் கோயிலிற்கு சென்றார்.

அப்போது, அங்கு கோயிலில் இருந்த சிலர் கோயிலை வலம் சென்று வழிபட்டு கொண்டிருந்தனர்.

இதை கண்ட சத்யா திடீரென சாமியாடுவது போல உணர்ச்சியுடன் ஆடினார்.

பின்னர், திடீரென கோயில் வளாகத்தில் எலுமிச்சை, கோழி அறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்டார். இதில், ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்திலேயே பலியானார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us