ADDED : ஜன 30, 2024 03:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே, பைக் மீது, லாரி மோதியதில், இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
திருவண்ணாலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஆனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 32; இவர், வேலுார் அடுத்த நரியாம்பட்டு துணை மின்நிலையத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றார். மீண்டும் பணிக்கு செல்ல, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, அவரது நண்பர் கோபால், 35, என்பவரை, வேலுார் செல்லும் பஸ் ஏற்றி விடுமாறு கூறினார். அதனால், இருவரும் ஹெல்மெட் அணியாமல் ஹோண்டா பைக்கில், இசுக்கழிகாட்டேரி கிராம கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த லாரி, இவர்கள் பைக் மீது மோதியதில், இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாயினர். வெறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.