sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

அடைப்புக் கட்டை உடைந்ததால் 2வது நாளாக நடந்த தேரோட்டம்

/

அடைப்புக் கட்டை உடைந்ததால் 2வது நாளாக நடந்த தேரோட்டம்

அடைப்புக் கட்டை உடைந்ததால் 2வது நாளாக நடந்த தேரோட்டம்

அடைப்புக் கட்டை உடைந்ததால் 2வது நாளாக நடந்த தேரோட்டம்


ADDED : ஏப் 23, 2024 08:21 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 08:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் திருப்பைஞீலியில் உள்ள நீள் நெடுங்கண் நாயகி அம்மன் சமேத நீலிவனேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலம். திருமண தடை நீக்கும் இந்த திருத்தலத்தில், சித்திரை தேரோட்டம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் நீலிவனேஸ்வரர் அம்பாளுடன் எருந்தருளினார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு துவங்கியது. தெற்கு ரத வீதியில் தேர் இழுத்துச் செல்லப்பட்ட போது, சோலார் விளக்கு கம்பத்தில் தேர் மோதியது. இளைஞர்கள் கம்பத்தை வளைத்து, 30 நிமிடங்களுக்கு பின், தேரை தொடர்ந்து இழுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.

தொடர்ந்து, பக்தர்கள் தேரை இழுத்துச் சென்ற நிலையில், தேரை நகர்த்தப் பயன்படுத்தும் அடைப்புக் கட்டை உடைந்ததால், தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. உடைந்த அடைப்புக் கட்டை சரி செய்யப்பட்டு, நேற்று மாலை 3:00 மணிக்கு மீண்டும் தேரோட்டம் துவங்கி, தேர் நிலைக்கு வந்தது.






      Dinamalar
      Follow us