/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பத்திரப் பதிவு அலுவலரிடம் பணம் கேட்ட போலி நிருபர்
/
பத்திரப் பதிவு அலுவலரிடம் பணம் கேட்ட போலி நிருபர்
ADDED : ஜூன் 11, 2024 12:09 AM
திருச்சி : திருச்சியில் பத்திரப் பதிவு அலுவலரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, ரெட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள வாசன்நகரை சேர்ந்தவர் பாலகுமரன், 38. மண்ணச்சநல்லுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில், செய்தியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், பத்திரப்பதிவு அலுவலர் கோகிலாவிடம் பணம் கேட்டு மிரட்டினார்.
பத்திரப்பதிவு அலுவலர், அவரிடம் அடையாள அட்டையை கேட்ட போது, பல்வேறு பத்திரிகையின் போலி முகவரி அட்டையை காட்டினார். சந்தேகமடைந்த அலுவலர் கோகிலா, இது குறித்து மண்ணச்சநல்லுார் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்படி விசாரணை செய்த போலீசார், பாலகுமாரனை கைது செய்தனர். பத்திரிகையாளர் என்ற பெயரில், பல இடங்களில் மோசடி செய்ததாக, இவர் மீது திருச்சி சமயபுரம், ராம்ஜி நகர், சோமரசம்பேட்டை மட்டுமின்றி சென்னை போலீஸ் ஸ்டேஷன்களிலும் வழக்குகள் உள்ளன.