sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

தஞ்சையில் மே 2ல் முற்றுகை போராட்டம்

/

தஞ்சையில் மே 2ல் முற்றுகை போராட்டம்

தஞ்சையில் மே 2ல் முற்றுகை போராட்டம்

தஞ்சையில் மே 2ல் முற்றுகை போராட்டம்


ADDED : ஏப் 26, 2024 01:40 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சியில், நேற்று, ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மேகதாது அணை கட்ட வலியுறுத்திய கர்நாடகா அரசுக்கு எதிராக, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற முன் வராமல், தமிழக முதல்வர் ஸ்டாலின் மவுனம் காத்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

காவிரி ஆற்று நீரை நம்பி, தமிழகத்தில் 22 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. மேகதாது அணை விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பதால், தமிழகத்துக்கான காவிரி உரிமையை மீண்டும் பறிகொடுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் தான் பல்வேறு காவிரி உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தமிழக அரசின் மீது, தமிழக விவசாயிகள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

எனவே, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி, மே 2ம் தேதி, தஞ்சையில் உள்ள கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து, பூம்புகார் முதல் மேகதாது வரை, விவசாயிகள் நடைபயணம் மேற்கொள்ளப்படும்.

அந்த நடைபயணத்தில், ஒரு லட்சம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மனு அளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us