sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கனடா நாட்டு பயணியிடம் ஏர்போர்ட்டில் தோட்டா பறிமுதல்

/

கனடா நாட்டு பயணியிடம் ஏர்போர்ட்டில் தோட்டா பறிமுதல்

கனடா நாட்டு பயணியிடம் ஏர்போர்ட்டில் தோட்டா பறிமுதல்

கனடா நாட்டு பயணியிடம் ஏர்போர்ட்டில் தோட்டா பறிமுதல்


ADDED : பிப் 23, 2025 01:22 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சியில் இருந்து இலங்கை செல்ல முயன்ற விமான பயணியிடம், தோட்டா ஒன்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் டொனால்டு வில்சன், அவரது மனைவி பிரிட்டானி சீலியுடன், 17ம் தேதி சென்னை வந்துள்ளார். நேற்று முன்தினம், விமானத்தில் திருச்சி வந்த அவர், நேற்று அதிகாலை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை செல்ல இருந்தார்.

அவரது பையில், வெடிக்காத துப்பாக்கி தோட்டா இருப்பதை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அதை பறிமுதல் செய்த அவர்கள், அது வேட்டை துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டா என்பதை அறிந்தனர்.

அவர், உரிமம் வைத்திருந்த போதிலும், விமானத்தில் ஆபத்தான வெடிபொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், தோட்டாவை பறிமுதல் செய்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us