/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கிணற்றில் விழுந்து தாய், மகள் தற்கொலை
/
கிணற்றில் விழுந்து தாய், மகள் தற்கொலை
ADDED : ஆக 18, 2024 02:53 AM
திருச்சி:மணப்பாறை அருகே, பொம்மம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ஜமுனா ராணி, 24; இவர்களின் மகள் மேகாஸ்ரீ, 6, மகன் ஜஸ்வந் 4, என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
நேற்று மதியம் வீட்டை விட்டுச் சென்ற மருமகளையும், பேத்தியையும் காணாததால், சுரேஷின் தந்தை கருப்பையா என்பவர் வயலுக்கு சென்று தேடியுள்ளார். அப்போது, வயல் கிணற்றின் அருகே செருப்புகள் கிடந்தன. அதனால், மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், 50 அடி ஆழம் கிணற்றில் இறங்கி தேடினர். ஒரு மணி நேர தேடலுக்கு பின்,ஜமுனா ராணி, மேகாஸ்ரீ இருவரையும் இறந்த நிலையில் மீட்டனர். சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். குடும்பத் தகராறு காரணமாக இறந்திருக்கலாம், என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

