sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஒரு துளி மெத்தனால் கூட வெளியே விற்பனை இல்லை: திருச்சி கலெக்டர்

/

ஒரு துளி மெத்தனால் கூட வெளியே விற்பனை இல்லை: திருச்சி கலெக்டர்

ஒரு துளி மெத்தனால் கூட வெளியே விற்பனை இல்லை: திருச்சி கலெக்டர்

ஒரு துளி மெத்தனால் கூட வெளியே விற்பனை இல்லை: திருச்சி கலெக்டர்


ADDED : ஜூன் 22, 2024 05:36 PM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:

திருச்சியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் போதைப்பொருள் எதிர்ப்பு குழு செயல்படும். அந்த குழு, மாவட்டத்தில் உள்ள 434 பள்ளிகளில் இருந்து, போதை பொருள் புழக்கம் குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த 'வாட்ஸாப்' மற்றும் கட்டணமில்லா எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொண்ட எட்டு குழுக்கள், தினமும் சோதனை நடத்தி வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை நிறுத்தும் வரை சோதனை தொடரும்.

மேலும், மருத்துவமனை, ஆய்வகம் மற்றும் தொழிற்சாலைகள் என, மெத்தனால் பயன்பாட்டுக்கு உரிமம் வழங்கப்பட்ட இடங்களில், முறையாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்து, ஒரு துளி கூட மெத்தனால் வெளியே விற்பனை செய்யப்படவில்லை. உரிமம் இல்லாமல் நடத்தப்படும் பார்கள், 'சீல்' வைக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us