/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பின்பக்க கண்ணாடி இன்றி ஓடிய பள்ளி பஸ்சால் பெற்றோர் அதிர்ச்சி
/
பின்பக்க கண்ணாடி இன்றி ஓடிய பள்ளி பஸ்சால் பெற்றோர் அதிர்ச்சி
பின்பக்க கண்ணாடி இன்றி ஓடிய பள்ளி பஸ்சால் பெற்றோர் அதிர்ச்சி
பின்பக்க கண்ணாடி இன்றி ஓடிய பள்ளி பஸ்சால் பெற்றோர் அதிர்ச்சி
ADDED : ஜூலை 02, 2024 05:17 AM

திருச்சி : திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில், எஸ்.ஆர்.வி., மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்படுகிறது. இந்த தனியார் பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
மாணவ, மாணவியரை பள்ளிக்கு அழைத்து வர, 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை, திருச்சி, நம்பர் 1 டோல்கேட் பகுதியில் இருந்து மாணவ, மாணவியரை அழைத்துச் சென்ற பள்ளி வாகனத்தின் பின்பக்கம் கண்ணாடி இல்லை.
அந்த இடத்தில், அட்டையை வைத்து அடைத்து, கயிறால் கட்டியிருந்தனர். ஆபத்தான முறையில் மாணவ, மாணவியரை அழைத்து சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆண்டுதோறும் பள்ளி, கல்லுாரிகள் திறப்புக்கு முன், கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளால் ஆய்வு செய்த பிறகே, பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த அபாயகரமான பள்ளி வாகனம், அதிகாரிகளால் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா என, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், 'அதிகாரிகள் ஆய்வுக்கு பின், கண்ணாடி உடைந்திருந்தால், அதை மாற்றிய பின், பள்ளி நிர்வாகம், அந்த வாகனத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.