/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
குழியில் கிடைத்த 2 சிலைகள் மீட்பு
/
குழியில் கிடைத்த 2 சிலைகள் மீட்பு
ADDED : ஆக 23, 2024 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டத்துார் கிராமத்தில், மின்சாரம் தயாரிக்க, தனியார் நிறுவனம் காற்றாலைகளை நிறுவுகிறது. இதற்காக துாண் அமைக்க குழி தோண்டினர்.
அப்போது, இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. 3 அடி உயரமுள்ள மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த சிலைகள் குறித்து உரிய ஆய்வாளர்களிடம் கொடுத்து, அவற்றின் காலம் மற்றும் தொன்மை குறித்து கண்டறிய, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

