sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கால்வாயில் குளித்த சிறுமி பலி காப்பாற்ற குதித்த தந்தை சாவு

/

கால்வாயில் குளித்த சிறுமி பலி காப்பாற்ற குதித்த தந்தை சாவு

கால்வாயில் குளித்த சிறுமி பலி காப்பாற்ற குதித்த தந்தை சாவு

கால்வாயில் குளித்த சிறுமி பலி காப்பாற்ற குதித்த தந்தை சாவு


ADDED : செப் 16, 2024 01:33 AM

Google News

ADDED : செப் 16, 2024 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையச் சேர்ந்தவர் சுரேஷ், 40. பெல் ஊழியரான இவருக்கு கிருத்திகா, 13, யாஷிகா, 6, என இரு மகள்கள். இவர் நேற்று மதியம் தன் இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு, கிளியூர் பகுதி கல்லணை கால்வாய்க்கு குளிக்க சென்றார். முதலில் குளிக்க இறங்கிய யாஷிகா, திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அதை பார்த்த தந்தை சுரேஷ், மகளை காப்பாற்ற கால்வாயில் குதித்தார். அவரும் அடித்துச் செல்லப்பட்டார்.

இதை கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மகள் கிருத்திகா கூச்சலிட, அங்கிருந்தோர் கால்வாயில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது யாஷிகா மட்டும் மீட்கப்பட்டு, பெல் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து திருச்சி, திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் பொதுமக்களுடன் சேர்ந்து அடித்துச் செல்லப்பட்ட சுரேஷை தேடி வருகின்றனர். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சுரேஷுக்கு நேற்று திருமண நாள்.






      Dinamalar
      Follow us