sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மாநகராட்சியுடன் இணைப்பு மறுத்து மக்கள் கருப்புகொடி

/

மாநகராட்சியுடன் இணைப்பு மறுத்து மக்கள் கருப்புகொடி

மாநகராட்சியுடன் இணைப்பு மறுத்து மக்கள் கருப்புகொடி

மாநகராட்சியுடன் இணைப்பு மறுத்து மக்கள் கருப்புகொடி


ADDED : ஆக 16, 2024 01:32 AM

Google News

ADDED : ஆக 16, 2024 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லுார், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள 27 கிராம ஊராட்சிகளை, திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால், வரி உயர்வதோடு, மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டமும் பறிபோகும் என்று கூறி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுதந்திர தினமான நேற்று இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அதவத்துார் ஊராட்சி மக்கள் வீடுகளின் முன் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், காலை 11:00 மணி முதல், பகல் 1:00 மணி வரை கிராம சபை கூட்டம் நடத்தப்படாமல் அனைவரும் காத்திருந்தனர்.

சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள், 'இந்த விவகாரத்தில் நாங்கள் முடிவு எடுக்க முடியாது' என்று கூறியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், 'அப்ப நீங்க எதற்காக பேச்சு நடத்த வந்தீர்கள்; உயர் அதிகாரிகளை வரச் சொல்லுங்கள்' எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us