sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மாஜி அமைச்சர் உதயகுமாருடன் 300 பேர் கைது

/

மாஜி அமைச்சர் உதயகுமாருடன் 300 பேர் கைது

மாஜி அமைச்சர் உதயகுமாருடன் 300 பேர் கைது

மாஜி அமைச்சர் உதயகுமாருடன் 300 பேர் கைது


ADDED : ஜன 01, 2025 06:22 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், மாநகரில் அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளை கண்டித்தும், நேற்று காலை மாநகர அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மரக்கடை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க.,வின் ஜெ., பேரவை செயலரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான உதயகுமார், அமைப்பு செயலர் ரத்தினவேல், மாவட்ட செயலர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்ய வந்தபோது, அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உதயகுமார் உட்பட, 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், போலீசார் தங்க வைத்தனர்.






      Dinamalar
      Follow us