sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

திருவானைக்காவல் கோயிலில் கோலாகல பங்குனி தேரோட்டம்

/

திருவானைக்காவல் கோயிலில் கோலாகல பங்குனி தேரோட்டம்

திருவானைக்காவல் கோயிலில் கோலாகல பங்குனி தேரோட்டம்

திருவானைக்காவல் கோயிலில் கோலாகல பங்குனி தேரோட்டம்


ADDED : மார் 31, 2025 10:31 AM

Google News

ADDED : மார் 31, 2025 10:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருவானைக்காவல் கோவிலில், நேற்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழா 48 நாட்கள் நடைபெறும்.

மார்ச் 18ம் தேதி, பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் புறப்பாடு மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது.

அதிகாலையில், உற்ஸவர் மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மகர லக்னத்தில் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

காலை 7:10 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதிகளில் தேர் வலம் வந்து, நிலை நிறுத்தப்பட்டது.

காலை 10:30 மணிக்கு மேல், அகிலாண்டேஸ்வரி அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தேர்களை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us