/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி ஏர்போர்ட்டில் ரூ. 27.19 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
/
திருச்சி ஏர்போர்ட்டில் ரூ. 27.19 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி ஏர்போர்ட்டில் ரூ. 27.19 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி ஏர்போர்ட்டில் ரூ. 27.19 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ADDED : நவ 11, 2024 06:57 AM
திருச்சி : மலேஷியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 27.19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சிக்கு, 'ஏர் ஏசியா' விமானம் வந்தது. அதில் வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, ஒரு பயணியை தனியே அழைத்துச் சென்று தீவிரமாக சோதனையிட்டதில், அவர் மறைத்து, உரிய அனுமதியின்றி எடுத்து வந்த, 353 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 27.19 லட்சம் ரூபாய். இதையடுத்து அந்த பயணியை, சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.