/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ரயில் மோதி இறந்தவர் உடல் 12 மணி நேரத்துக்கு பின் மீட்பு
/
ரயில் மோதி இறந்தவர் உடல் 12 மணி நேரத்துக்கு பின் மீட்பு
ரயில் மோதி இறந்தவர் உடல் 12 மணி நேரத்துக்கு பின் மீட்பு
ரயில் மோதி இறந்தவர் உடல் 12 மணி நேரத்துக்கு பின் மீட்பு
ADDED : டிச 30, 2024 11:32 PM
திருச்சி; திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பூமாலைப்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 'வந்தேபாரத்' ரயிலில் ஒருவர் அடிபட்டு இறந்ததாக, திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரயில்வே போலீசார், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை அப்பகுதியில் தேடியும், உடல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்களும் நேற்று காலை முதல் தேடினர்.
தேடுதலில், அவர் அடிபட்ட இடத்தில் இருந்து சிறிது துாரத்தில் உள்ள கழிவுநீர் குட்டை அருகே உடல் கிடந்தது. உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரயிலில் அடிபட்டு இறந்தவருக்கு, 60 வயதுக்கு மேல் இருக்கும். அவர் குறித்து, திருச்சி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.