sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

சட்ட மாணவருக்கு அவமதிப்பு சக மாணவர் 2 பேர் மீது வழக்கு

/

சட்ட மாணவருக்கு அவமதிப்பு சக மாணவர் 2 பேர் மீது வழக்கு

சட்ட மாணவருக்கு அவமதிப்பு சக மாணவர் 2 பேர் மீது வழக்கு

சட்ட மாணவருக்கு அவமதிப்பு சக மாணவர் 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 19, 2024 11:59 PM

Google News

ADDED : ஜன 19, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், முத்துக்குளத்தில் தேசிய சட்டப்பள்ளி உள்ளது. இங்கு, ஐந்தாம் ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களில் சிலர், கடந்த 6ம் தேதி பிறந்த நாள் விழா நடத்தினர். அப்போது மது அருந்திய, இரு ஐந்தாம் ஆண்டு மாணவர்கள், மதுவில் சிறுநீர் கழித்து, சக மாணவருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இரு நாட்கள் கழித்து சிறுநீர் குடித்த விவகாரம் தெரிந்த, பாதிக்கப்பட்ட மாணவர், கல்லுாரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்; இரு மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த, 12ம் தேதி பாதிக்கப்பட்ட மாணவர், தன் புகாரை வாபஸ் பெறுவதாக, கல்லுாரி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்தார்.

ஆனாலும், பேராசிரியர்கள் அடங்கிய விசாரணைக்குழு தன் அறிக்கையை நேற்று முன்தினம் கல்லுாரி நிர்வாகத்திடம் அளித்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தேசிய சட்டப்பள்ளி பதிவாளர் பாலகிருஷ்ணன், ராம்ஜிநகர் போலீசில், சிறுநீர் விவகாரம் குறித்து புகார் அளித்தார்.

அந்த புகாரின்படி, சிறுநீர் கலந்து கொடுத்த, ஐந்தாம் ஆண்டு சட்டம் படிக்கும் இரு மாணவர்கள் மீது, ராகிங் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us