/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீர்
/
முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீர்
ADDED : ஜூலை 31, 2024 12:07 AM
திருச்சி : மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், நேற்று, திருச்சி முக்கொம்பு மேலணையை வந்த-டைந்தது. அதனால், இன்று முதல் கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
கர்நாடகா மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்வதாலும், அங்குள்ள அணைகள் நிரம்பி-யதாலும், அங்கிருந்து தமிழகத்துக்கு ௨ லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று அணை முழு கொள்ள-ளைவை எட்டியது.
ஏற்கனவே, தமிழக முதல்வர் உத்தரவுப்படி, கடந்த 28 ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர், நாமக்கல், கரூர் மாவட்-டங்களை கடந்து, நேற்று மதியம், திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணையை வந்தடைந்தது. முக்கொம்பு மேலணைக்கு வந்த தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு, கல்லணைக்கு சென்று கொண்டிருக்கி-றது. அதே சமயம், இன்று காலை, கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவும் ஏற்-பாடு செய்யப்பட்டுள்ளது.