ADDED : ஜன 24, 2024 11:39 PM

திருச்சி:வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், தை மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனப்படும், தைத்தேர் திருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடைபெற்று வருகிறது,
விழா நாட்களில், தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். நேற்று முன்தினம், தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் உற்சவம், நேற்று காலை நடைபெற்றது.
அதிகாலை 4:30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் தைத் தேர் மண்டபம் வந்தடைந்தார், பின், அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளினார். காலை 6:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. உத்திர வீதிகளில் வலம் வந்த தேரை, 'ரெங்கா ரெங்கா' கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காலை 10:30 மணிக்கு தேர் நிலை வந்தடைந்தது.