sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

சொத்து தகராறில் கொலை தம்பதிக்கு ஆயுள் தண்டனை

/

சொத்து தகராறில் கொலை தம்பதிக்கு ஆயுள் தண்டனை

சொத்து தகராறில் கொலை தம்பதிக்கு ஆயுள் தண்டனை

சொத்து தகராறில் கொலை தம்பதிக்கு ஆயுள் தண்டனை


ADDED : அக் 24, 2024 02:01 AM

Google News

ADDED : அக் 24, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணப்பாறை:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தாழக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் தங்கபாண்டியன், 23. இவரின் உறவினர் சுப்பிரமணியன், 55, அவரது மனைவி மாலதி, 50, ஆகியோர், தங்கபாண்டியன் வீட்டின் அருகில் வசித்தனர். இரு குடும்பத்துக்கும் பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக, பிரச்னை இருந்தது. தங்கபாண்டியன் தலையீட்டால், சுப்பிரமணியனால் பூர்வீக சொத்தை விற்க முடியவில்லை.

இதனால், ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியும், அவரது மனைவியும் சேர்ந்து, 2022, மே 18 இரவில், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த தங்கபாண்டியனை, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். வையம்பட்டி போலீசார் தம்பதியை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட கூடுதல் முதலாவது நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சுவாமிநாதன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், தங்கபாண்டியனை கொலை செய்த சுப்பிரமணி, மாலதி தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us