sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

டி.எஸ்.பி., பதவி கிடைக்குமா? சீனியர் இன்ஸ்பெக்டர்கள் ஏக்கம்!

/

டி.எஸ்.பி., பதவி கிடைக்குமா? சீனியர் இன்ஸ்பெக்டர்கள் ஏக்கம்!

டி.எஸ்.பி., பதவி கிடைக்குமா? சீனியர் இன்ஸ்பெக்டர்கள் ஏக்கம்!

டி.எஸ்.பி., பதவி கிடைக்குமா? சீனியர் இன்ஸ்பெக்டர்கள் ஏக்கம்!


ADDED : ஜன 06, 2024 08:22 PM

Google News

ADDED : ஜன 06, 2024 08:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:தமிழகம் முழுதும் பணியாற்றி வரும், 236 இன்ஸ்பெக்டர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், டி.எஸ்.பி., பதவி உயர்வுக்கான ஒரு மாத பயிற்சியை முடித்தனர். இதில், 47 பேருக்கு உடனடியாக டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு, தமிழக போலீஸ் துறையில் உள்ள காலி பணியிடங்கள் அடிப்படையில், டி.எஸ்.பி., பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பயிற்சி முடித்த சீனியர் இன்ஸ்பெக்டர்கள் பலர், ஓய்வு பெறும் வயதை அடைந்துள்ளனர். அவர்கள் ஓய்வு பெறுவதற்குள் டி.எஸ்.பி., பதவி உயர்வு கிடைக்குமா என, அரசின் முடிவை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இது குறித்து, பயிற்சி முடித்த இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது:

தமிழகம் முழுதும், 100க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி., பணியிடங்கள் காலியாக உள்ள அந்த பணியிடங்களை நிரப்ப, அரசு முன் வந்தால், விரைவில் பணி ஓய்வுக்கு காத்திருக்கும் இன்ஸ்பெக்டர்கள் பலர், டி.எஸ்.பி.,யாக பணியில் இருந்து ஓய்வு பெறுவர்.

இல்லாவிட்டால், இவ்வளவு ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்தது வீணாகி, தகுதி இருந்தும் டி.எஸ்.பி., ஆகாமல், இன்ஸ்பெக்டராகவே ஓய்வு பெற நேரிடும். ஓய்வூதியத்திலும் இழப்பு ஏற்படும். தமிழக அரசு உடனடியாக காலியாக உள்ள டி.எஸ்.பி., பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக, 70 பேருக்கு டி.எஸ்.பி., பதவி உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான கோப்பு தயாராக உள்ளது. அரசு உத்தரவிட்டால், உடனடியாக பணி உயர்வு உத்தரவு வெளியாகும். இதனால், 70 பேரும் டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்பர்' என்றனர்.






      Dinamalar
      Follow us