/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மூவரை கத்தியால் குத்திய கும்பல் ஒருவர் பலி; உறவினர்கள் மறியல்
/
மூவரை கத்தியால் குத்திய கும்பல் ஒருவர் பலி; உறவினர்கள் மறியல்
மூவரை கத்தியால் குத்திய கும்பல் ஒருவர் பலி; உறவினர்கள் மறியல்
மூவரை கத்தியால் குத்திய கும்பல் ஒருவர் பலி; உறவினர்கள் மறியல்
ADDED : ஏப் 27, 2025 03:00 AM
திருச்சி: தொட்டியம் அருகே நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் மூன்று பேரை கத்தியால் குத்தியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே, அழகரை ஊராட்சிக்குட்பட்ட கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, 50, குமார், 42, சந்துரு, 19, ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, மணமேடு பகுதியில் இருந்து கல்லுப்பட்டிக்கு பைக்கில் சென்றனர். அப்போது, மர்ம நபர்கள் சிலர் பைக்கை வழிமறித்து, மூன்று பேரையும் கத்தியால் குத்தி தப்பி ஓடினர்.
இதில், சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குமார், சந்துரு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, சுப்பிரமணியன் உறவினர்கள், நேற்று முன்தினம் இரவு, திருச்சி - நாமக்கல் சாலையில், மணமேடில் மறியலில் ஈடுபட்டனர். முசிறி போலீஸ் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார்.
மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொட்டியம் போலீசார் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.