sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

வீடுகள் தோறும் மகரஜோதி அய்யப்ப பக்தர்களுக்கு அழைப்பு

/

வீடுகள் தோறும் மகரஜோதி அய்யப்ப பக்தர்களுக்கு அழைப்பு

வீடுகள் தோறும் மகரஜோதி அய்யப்ப பக்தர்களுக்கு அழைப்பு

வீடுகள் தோறும் மகரஜோதி அய்யப்ப பக்தர்களுக்கு அழைப்பு


ADDED : ஜன 13, 2025 01:02 AM

Google News

ADDED : ஜன 13, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: மகர ஜோதியன்று வீடுகள், பொது இடங்களில் விளக்கேற்ற சபரிமலை அய்யப்பா சேவா சமாஜம் அய்யப்ப பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, சமாஜத்தின் மாநில தலைவர் பிரபாகரன், பொதுச்செயலர் ராஜன் வெளியிட்ட கூட்டறிக்கை:

சபரிமலையில் ஜன., 14ம் தேதி மகரஜோதி விழா நடைபெற உள்ளது.

அன்று நாடு முழுதும் அய்யப்ப பக்தர்கள், தங்கள் வீடுகளில் மகரஜோதியை வரவேற்கும் வகையில், வீடுதோறும் மகரஜோதி ஏற்றி வழிபட வேண்டும்.

குறைந்தது, 18 கார்த்திகை அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். இறைவனுக்கு விளக்கு, புஷ்பம், நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

புனிதமான மகர சங்கராந்தி தினத்தில், சூரிய பகவானையும், மகரஜோதியையும் ஒன்றுபட வழிபடும் வகையில், சூரியபகவான் மறையும் மகரஜோதி நேரமான மாலை, 6:30 மணி முதல் இரவு 7:15 மணி வரை, உலக மக்கள் அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு, 18 பேறுகளும் கிடைக்க, 18 அகல் விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும்.

அனைத்து வீடுகள், கோவில்கள், மாநகர், கிராமங்கள், முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் அய்யப்ப பக்தர்களும், பொதுமக்களும் விளக்குகள் ஏற்றி வழிபடலாம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us