sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

'வீடு தோறும் மகரஜோதி' ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு

/

'வீடு தோறும் மகரஜோதி' ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு

'வீடு தோறும் மகரஜோதி' ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு

'வீடு தோறும் மகரஜோதி' ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு


ADDED : ஜன 12, 2025 05:19 AM

Google News

ADDED : ஜன 12, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : மகர ஜோதியன்று வீடுகள், பொது இடங்களில் விளக்கேற்ற சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து சமாஜத்தின் மாநில தலைவர் பிரபாகரன், பொதுச்செயலாளர் ராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

சபரிமலையில் ஜன. 14ம் தேதி மகரஜோதி விழா நடைபெற உள்ளது.

அன்று நாடு முழுவதும் ஐயப்ப பக்தர்கள், தங்களது வீடுகளில் மகரஜோதியை வரவேற்கும் வகையில், வீடு தோறும் மகரஜோதி (பவனம் சன்னிதானம்) ஏற்றி வழிபட வேண்டும்.

குறைந்தது 18 கார்த்திகை அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். இறைவனுக்கு விளக்கு, புஷ்பம், நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

புனிதமான மகர சங்கராந்தி தினத்தில், சூரிய பகவானையும், மகரஜோதியையும் ஒன்றுபட வழிபடும் வகையில், சூரியபகவான் மறையும் மகரஜோதி நேரமான மாலை 6.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை, உலக மக்கள் அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு, 18ம் படி தேவதைகளின் அருளை பெற, 18 அகல் விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும்.

இதனை, அனைத்து வீடுகள், கோயில்கள், மாநகர், கிராமங்கள், முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் விளக்குகள் ஏற்றி வழிபடலாம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us