sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஆளுங்கட்சிக்கே பாதுகாப்பு இல்லை: தி.மு.க., கவுன்சிலர்

/

ஆளுங்கட்சிக்கே பாதுகாப்பு இல்லை: தி.மு.க., கவுன்சிலர்

ஆளுங்கட்சிக்கே பாதுகாப்பு இல்லை: தி.மு.க., கவுன்சிலர்

ஆளுங்கட்சிக்கே பாதுகாப்பு இல்லை: தி.மு.க., கவுன்சிலர்


ADDED : ஜூலை 18, 2025 02:44 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாநகராட்சி 64வது வார்டு கவுன்சிலராக, தி.மு.க.,வைச் சேர்ந்த மலர்விழி உள்ளார். கழிவுநீர் சாக்கடை அமைப்பது தொடர்பாக, வேல்முருகன் என்ற ஒப்பந்ததாரருக்கும், அவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் வேல்முருகனிடம் வேலை பார்த்த நபரை, கவுன்சிலர் மலர்விழியின் மகனும், தி.மு.க., வட்டச் செயலருமான ஆனந்தின் ஆதரவாளர்கள் தாக்கினர். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தரப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை, கே.கே.நகர் எல்.ஐ.சி., காலனியில் உள்ள கவுன்சிலர் மலர்விழி வீட்டுக்குள் புகுந்து, அவரையும், அவரது கர்ப்பிணி மருமகள் உள்ளிட்டோரையும் உருட்டுக்கட்டைகளால் தாக்கினர். மேலும், வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய நபர்கள், வாசலில் இருந்த காரையும் சேதப்படுத்தி தப்பி ஓடினர். காயமடைந்த கவுன்சிலர் மலர்விழி உள்ளிட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

''ஆளுங்கட்சி கவுன்சிலருக்கே பாதுகாப்பு இல்லை,'' என, தி.மு.க., கவுன்சிலர் மலர்விழி கண்ணீர் மல்க கூறினார்.






      Dinamalar
      Follow us