/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
முதியவரிடம் பணம் பறித்த சிறுவன் உட்பட மூவர் கைது
/
முதியவரிடம் பணம் பறித்த சிறுவன் உட்பட மூவர் கைது
ADDED : ஏப் 11, 2025 01:40 AM
திருச்சி:திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மகாதேவன், 62, நேற்று முன்தினம் பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்து சென்றார்.
அவரை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், திடீரென முதியவரை மடக்கி பிடித்து, அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, 6,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தை, அங்கிருந்தவர்களும், அந்த வழியாக சென்றவர்களும் தடுக்கவோ, சிறுவர்களை மடக்கி பிடிக்கவோ முயற்சிக்கவில்லை. இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
திருச்சியில், போதை மாத்திரைகள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. அவற்றை பயன்படுத்தும் சிறார்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிந்த காந்திமார்க்கெட் போலீசார், தாராநல்லுாரை சேர்ந்த அண்ணாமலை, 20 தர்மதுரை, 23, ஆகிய வாலிபர்களையும் ஒரு சிறுவனையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

